திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் : நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை

கடலூரில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 15 மின்மோட்டர்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-06-19 10:06 GMT
கடலூரில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 15 மின்மோட்டர்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். புதுப்பாளையம், பாலாஜி நகர், லஷ்மிநகர் ஆகிய இடங்களில் வீடுகளில் முறைகேடாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அங்கு நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட முயன்றனர். போலீசார் அங்கு விரைந்து வந்து எச்சரித்ததையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.
Tags:    

மேலும் செய்திகள்