பஸ்டே கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் - தடையை மீறி கொண்டாடியதால் கைது

சென்னையில் தடை செய்யப்பட்ட பஸ்டே கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-17 11:20 GMT
சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி, புதுக்கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லக் கூடிய பேருந்தில் பஸ் டே கொண்டாடினர். பேருந்தின் கூரை மீது ஏறி அவர்கள் பயணம் செய்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் 14 மாணவர்களை கைது செய்தனர். இதே போன்று பிராட்வேயிலிருந்து மந்தைவெளி செல்லும் பேருந்தில் புதுக்கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்