பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்தி சிறப்பு பூஜை

பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்தி புனிதம் மேம்படுவதற்கு சண்முக ஆரத்தி பூஜை நடைபெற்றது.

Update: 2019-06-15 05:27 GMT
பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்தி புனிதம் மேம்படுவதற்கு சண்முக ஆரத்தி பூஜை நடைபெற்றது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சண்முக நதியில் புனித நீராடி மலைக் கோவில் செல்வது வழக்கம். அந்த சண்முக நதியில் அமலைச் செடிகள் நிறைந்து அசுத்தமாக காணப்பட்டு வந்தது. இதனை தூய்மைப்படுத்துவதற்கு பழனியில் உள்ள சமூக ஆர்வலர்களும் முருக பக்தர்களும் ஒன்றிணைந்தனர். கடந்த 2 நாட்களாக பக்தர்கள் நீராடும் பகுதியில் அமலைச் செடிகளை அகற்றி, நதியை மேலும் புனிதப்படுத்த சண்முக ஆரத்தி பூஜை நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்