நாகர்கோவில் : பெண்ணை தாக்கி 9 சவரன் தாலி செயின் பறிப்பு

நாகர்கோவில் அருகே நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-14 09:50 GMT
நாகர்கோவில் அருகே நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் காந்திமதி. இன்று காலை இவர் நடைபயிற்சிக்கு சென்ற போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச்செயினை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்