இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை

கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு துறையினர் நேற்று சோதனை நடத்திய நிலையில், மாநில போலீசாரும் வருவாய் துறையினரும் இன்று 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-13 08:47 GMT
இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் 6 பேரின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அன்பு நகர் ஷாஜகான், கரும்பு கடை ஹபிபுல்லா, வின்சென்ட் ரோடு முகமது உசேன், ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை முதல் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வருவாய் துறையினரும் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து, 2வது நாளாக சோதனை நடைபெறுவதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது .
Tags:    

மேலும் செய்திகள்