கல்குவாரி இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி : பழுதான இயந்திரத்தை சரிசெய்த போது பரிதாபம்

கல் குவாரி பணியின்போது இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி, காட்டுக்கொல்லை பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது.

Update: 2019-06-10 01:59 GMT
கல் குவாரி பணியின்போது இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி, காட்டுக்கொல்லை பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில், சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சாமிநாதன் என்பவர், கல் குவாரியில் உள்ள இயந்திரம் பழுதானதால், சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆம்பூர் கிராமிய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்