சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் - 50 பேர் கைது

சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-06-08 11:02 GMT
சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இரு சக்கர வாகன பிரச்சார பயணம் மேற்கொள்வதற்காக கிள்ளையில் இருந்து மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.  போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார்  கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்