மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி அழிப்பு : தார்பூசி அழித்தது யார்? - போலீஸ் விசாரணை

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் தார்பூ சி அழிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-08 09:02 GMT
குறிப்பாக, விமான நிலையம் தலைமை தபால் நிலையம், பி.எஸ்.என். எல் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பெயர் பலகையில் மஞ்சள் எழுத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்கள் மட்டும் தார்பூசி அழிக்கப்பட்டது. ஆனால், ஆங்கில எழுத்துக்களை மட்டும் மர்ம நபர்கள் விட்டு விட்டனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சி போலீசார் கண்காணிப்பு காமிரா உதவியுடன் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்த நபர்களை பிடிக்க, தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்