பழனியில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் : அலைமோதிய கூட்டம்
இன்று வைகாசி மாதத்தின் இறுதி முகூர்த்த நாள் என்பதால் பழனியில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
இன்று வைகாசி மாதத்தின் இறுதி முகூர்த்த நாள் என்பதால் பழனியில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் மட்டும் சுமார் இருநூறு திருமணங்கள் நடைபெற்றது. இதனால் அடிவாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களிலும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் பிளாட்பாரம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது.