உள்வாங்கிய கடல் பகுதி : தெளிவாக காணக்கிடைத்த பவளப்பாறைகள், மீன்கள்

ராமேஸ்வரம் பகுதியில் கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள், மீன்கள் அனைத்தும் தெளிவாக காண முடிந்தது.

Update: 2019-06-05 08:59 GMT
ராமேஸ்வரம் பகுதியில் கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள், மீன்கள் அனைத்தும் தெளிவாக காண முடிந்தது. ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தம், சங்குமால், ஓலைக்குடா போன்ற பகுதிகளில் சில தினங்களாக கடல் நீர் உள்வாங்குவதும், காலை 10 மணிக்கு பின்பாக மீண்டும் கடல் நீர் பெருக்கெடுத்து வருவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இன்று அக்னிதீர்த்தம் பகுதியில் கடல்நீர் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் கடலில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடலில் உள்ள மீன்களும் தெளிவாக தெரிந்தது. இந்த காட்சிகள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்