ராகுல் காந்தி காங். தலைவராக தொடர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

Update: 2019-06-02 11:19 GMT
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கோவை இருகூர் காந்தி சிலை மைதானத்தில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இது தற்காலிக தோல்வி தான் என்றும், தோல்விக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்