மூதாட்டி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் : பேத்தி உட்பட 4 பேர் கைது

இரண்டரை சவரன் நகைக்காக பேத்தியே பாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-22 21:44 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நியூ பைபாஸ் சாலை அருகே 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில், அவர், தஞ்சை மாவட்டம் புலவஞ்சி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பதும், சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடியில் உள்ள பேத்தி சுமதி வீட்டுக்கு வந்ததும் தெரிந்தது. இதனையடுத்து சுமதி, அவரது கணவர் ஆறுமுகத்திடம் நடத்திய விசாரணையில், இரண்டரை சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புகொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் பெரியசாமி, சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்