நெல்லை கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலில், நரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2019-05-18 02:14 GMT
நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலில், நரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், 12 வகையான திரவியங்களால் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், நாம பஜனையுடன் பெருமாள், சப்பரத்தில் தீர்த்த வலம் வருதலும், ஸ்ரீ நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரத்தில் சகஸ்ர நாம அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்