குப்பைகளை சேகரிக்க மின்சார வாகனங்கள் : ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வாங்கிய மாநகராட்சி

தஞ்சையில், குப்பைகளைச் சேகரிப்பதற்காக மின்சார பேட்டரியில் இயங்கும் 30 வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளன.

Update: 2019-05-17 10:11 GMT
தஞ்சையில், குப்பைகளைச் சேகரிப்பதற்காக மின்சார பேட்டரியில் இயங்கும் 30 வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குப்பைகளைத் தரம் பிரிப்பதற்காக 14 இடங்களில் மையம் அமைக்கப்பட உள்ளன.  இந்த மையங்களுக்கு குப்பைகளை சேகரிக்கப்பதற்காக  பேட்டரியில் இயங்கும் 30 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மொத்தமாக 64 வாகனங்கள் வாங்க உள்ளதாகவும், இந்த வாகனங்கள் டீசல் பயன்பாட்டை முழுவதுமாக தடுக்கும் என்பதால்  சுற்ச்றுசூழல் மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
Tags:    

மேலும் செய்திகள்