பழனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பள்ளிகளில் பயன்படுத்தப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி மற்றும் வட்டாட்சியர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைக்கும் கருவி, முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறைகளை கண்டறியப்பட்டு, அவைகளை சரி செய்ய கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.