நாமக்கல் : தனியார் உணவகத்தில் சப்ளையருக்கு கத்திக்குத்து...

நாமக்கல்லில் உள்ள தனியார் உணவக சமையலர், சப்ளையரை கத்தியால் கழுத்தறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-15 09:16 GMT
நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில், சமையலராக ஞானசேகரன் என்பவரும், சப்ளையராக கிருஷ்ணமூர்த்தி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட வாய்தகராறு, அவ்வப்போது சமாதானம் செய்து வைக்கப்பட்டுள்ளது. எனினும், நேற்றிரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சமையல் மாஸ்டர் ஞானசேகரன், சர்வர் கிருஷ்ணமூர்த்தியை கத்தியால் குத்தியுள்ளார். கழுத்தை அறுக்க முயற்சித்ததில், ஏற்பட்ட காயத்தால், கிருஷ்ணமூர்த்தி மயக்கமடைந்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்