தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 296 உயர்வு
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்தது.
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் 3 ஆயிரத்து 54 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 3 ஆயிரத்து 91 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 24 ஆயிரத்து 432 ரூபாயிலிருந்து, 24 ஆயிரத்து 728 ரூபாயாக அதிகரித்தது. மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை உயராத நிலையில், சென்னையில் மட்டும் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.