போலி ஆவணங்கள் தயாரித்த கும்பல் சிக்கியது : இலங்கையை சேர்ந்த 3 பேர் உள்பட 13 பேர் கைது

போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 13 பேர் கொண்ட கும்பலை கியூ பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

Update: 2019-05-12 02:05 GMT
போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த  13 பேர் கொண்ட கும்பலை கியூ பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த கலையரசி என்ற பெண், மூளையாக செயல்பட்டதும், அவருக்கு உதவியாக ராதாகிருஷ்ணன் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்த‌து. இவர் திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் செயலாளராக இருக்கிறார்.  அச்சு அசலாக போலி பாஸ்போர்ட்டை தயாரிப்பதற்கு  இலங்கையைச் சேர்ந்த கிருபா, நிமலன், உதயகுமார் ஆகிய மூன்று நபர்களும்  உடந்தையாக இருந்துள்ளனர்.  இவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள், பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கலையரசி, ராதாகிருஷ்ணன், கிருபா உள்ளிட்ட 13 பேர் நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்