"குற்ற வழக்குகளை மறைத்தவர்கள் காவல் துறையில் நியமனம் பெற உரிமையில்லை" - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு

குற்ற வழக்குகளை முழுமையாக மறைத்தவர்களுக்கு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றில் பணி நியமனம் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

Update: 2019-05-11 18:58 GMT
2017ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வுக்கு குற்ற வழக்குகளை மறைத்ததாக கூறி, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, பிரவீன்குமார், அழகுராஜ் உள்ளிட்ட 46 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காவல்துறை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அப்பழுக்கற்ற குணநலன்களும் நேர்மையும் கொண்டிருக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டினார். குற்ற வழக்குகளை மறைத்தவர்களின் விண்ணப்பங்களையும், சந்தேகத்தின் அடிப்படையில் குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றவர்களின் விண்ணப்பங்களையும் நிராகரித்த தேர்வு வாரிய உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார். அதேசமயம் வழக்கு நிலுவையில் இருந்தால் அவர்களை தேர்வில் கலந்து கொள்ளவும், பணி நியமனம் வழங்குவதற்கும் அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்