ஓய்வுபெற்ற பொறியாளர் வீட்டில் கொள்ளை : 30 சவரன் நகை திருட்டு - போலீஸ் விசாரணை

நாகை மாவட்டம் கொள்ளிடம் கே.ஏ.டி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய பொறியாளரான பழனிவேல், தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

Update: 2019-05-10 22:24 GMT
நாகை மாவட்டம் கொள்ளிடம் கே.ஏ.டி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய பொறியாளரான பழனிவேல், தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் முன்புற கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 30 சவரன் நகையை திருடிச்சென்றுள்ளனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் பழனிவேலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். நேற்று மாலை வெளியூரிலிருந்து வீடு திரும்பிய அவர், அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்