தெருக்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் தெருக்களில் கோலம் போட்டு நகராட்சி ஊழியர்கள் நூதன ​பிரசாரம் செய்தனர்

Update: 2019-05-08 19:30 GMT
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் தெருக்களில் கோலம் போட்டு நகராட்சி ஊழியர்கள் நூதன ​பிரசாரம் செய்தனர். இந்த நகராட்சியில் சுகாதார சீர்கேட்டை தடுக்க, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பல வண்ண கலர் பொடிகளை கொண்டு கோலங்களை வரைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்