பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி : பெண் காவலர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்த கலவரம் தொடர்பாக, பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

Update: 2019-04-25 21:17 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்த கலவரம் தொடர்பாக, பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த 21 வயதான நந்தினி என்ற அந்த பெண் காவலர், கடந்த 7 நாட்களாக பொன்னமராவதியில் பணியில் உள்ளார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்த அவரை பரிசோதித்தபோது, விஷம் அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, அவரது செல்போனில், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும், ரைட்டர் ஒருவர் மீது புகார் கூறியும் ஆடியோ பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்