7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : ரூ.3 லட்சம் இழப்பீடு

ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Update: 2019-04-24 11:56 GMT
கோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு  அறிவித்துள்ளார். இந்த தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்