அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-04-24 07:09 GMT
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும்  தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, கரூர் மக்களவை தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்