கிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்த சிறுவன்

திருவண்ணாமலை மாவட்டம் ராமநாதபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜல சமாதி அடைந்து விட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-04-22 19:22 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ராமநாதபுரத்தில்  கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜல சமாதி அடைந்து விட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் உயிரிழந்த  தனநாராயணன் என்ற சிறுவனின் உடல், இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தான் உண்மை என்றும் தவறாக வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்