"யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும்" - தம்பிதுரை

கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

Update: 2019-04-20 06:12 GMT
கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார். அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே, அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், இரட்டை இலை சின்னம் வெற்றிபெறும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்