மஞ்சள் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Update: 2019-04-19 13:49 GMT
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூப்பல்லக்கில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கள்ளழகர் வேடத்தில் மஞ்சள் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் மேலசத்திரம் பகுதியில் உள்ள தல்லாகளம் மண்டகபடியில் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர்.
Tags:    

மேலும் செய்திகள்