வாக்களிக்க வந்த முதியவர் மாரடைப்பால் மரணம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த 65 வயதான முருகேசன் என்கிற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2019-04-18 10:04 GMT
ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த 65 வயதான முருகேசன் என்கிற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு மசூதி வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது குடும்பத்தினருடன் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளார். வாக்குப்பதிவு மையத்துக்குள் சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்ததும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்