அடர்வனப்பகுதியில் 3 வாக்குசாவடிகள் : ஆற்றை கடந்து கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்

ஈரோடு மாவட்டடம், சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வேன் மற்றும் ஜிப்பில் மாயாற்றை கடந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

Update: 2019-04-17 22:09 GMT
ஈரோடு மாவட்டடம், சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வேன் மற்றும் ஜிப்பில் மாயாற்றை கடந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தெங்குமரஹாடாவில் இரண்டு மற்றும் கல்லாம்பாளையத்தில் ஒன்று என மொத்தம், 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேட் இயந்திரம் மற்றும் வாக்குச்சாவடியில் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை குன்னூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள், வாகனங்கள் மூலம், மாயாற்றை கடந்து எடுத்துச் சென்றனர். நடு ஆற்றில் வாகனம் பழுதானதால், துணை ராணுவப்படையினர் வேனை தள்ளிச்சென்றனர். சிறிது நேர போராட்டத்திற்கு  பின்னர் பாதுகாப்பாக வாகனம் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்