குற்றவாளியை தாக்கிய நபர்கள் மீது வழக்குபதிவு

கோவை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சந்தோஷ்குமாரை தாக்கிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-04-05 10:20 GMT
கோவை அரசு மருத்துவமனைக்கு சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார்  அழைத்து வந்தனர், அப்போது சோதனை முடிந்து வெளியே வந்த சந்தோஷ்குமாரை அங்கு கூடியிருந்த நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.இது தொடர்பாக பந்தயசாலை காவல் நிலையத்தில் தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரை மறித்து பணி செய்வதை தடுத்தல் என்ற பிரிவின் கீழ் ஜலாலுதீன், நசீர், பன்னா அபு உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்