மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நியமனம் - உத்திரவாதம் அளிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நியமனத்தில், உத்தரவாதம் அளிக்குமாறு மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-27 00:43 GMT
மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நியமனத்தில், உத்தரவாதம் அளிக்குமாறு மின் வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நிர்மல்குமார், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவதில்லை  என்று குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் காலியிடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியை தவிர வேறு நபர்களை நியமனம் செய்யமாட்டோம் என உத்தரவாதம் அளிக்குமாறு, மின்வாரியத்திற்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து  இந்த மனுவின் விசாரணையை  ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்