இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு - விசாரணை மீதான இடைக்கால தடை நீட்டிப்பு

விசாரணை மீதான இடைக்கால தடையை நீட்டித்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Update: 2019-03-20 11:11 GMT
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில், தினகரன் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், நீதிமன்ற விசாரணைக்கு தடைக்கோரியும் தினகரன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,விசாரணை மீதான இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து, வழக்கை 20 ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்