சரக்கு வாகனங்களில் இருந்து ரூ.2.79 லட்சம் பறிமுதல்

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-20 04:26 GMT
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த சரக்கு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மீன் ஏற்றி சென்ற வாகனத்தை சோதனையிட்டதில் காஸிம் என்பவரிடம்  இருந்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கீழப்பாவூர் நோக்கி வாகனத்தில் வந்த காய்கறி வியாபாரி கருத்தபாண்டி என்பவரிடம் இருந்த 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்