தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.34.8 லட்சம் பறிமுதல்

Update: 2019-03-19 10:10 GMT
நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், 34 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.தனியார் பேருந்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அல்பீல்தீன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பணத்தை உறவினர் ஒருவருக்கு கொடுக்க வந்ததாக அவர் தெரிவித்த நிலையில், இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணம் அகஸ்டீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்