சேலம் அமமுக வேட்பாளர் பிரசாரம் : குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சேலத்தில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.கே.செல்வம் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், குக்கர் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அமமுகவுக்கு குக்கர் சின்னம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அக்கட்சி வேட்பாளர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.