டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி செல்போன் பறிப்பு : 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுபான கடை விற்பனையாளர்களை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-17 03:55 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுபான கடை விற்பனையாளர்களை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 14ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு திரும்பிய ஆனந்தமுருகன், குழந்தைவேல் ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் மூவர் வழிமறித்து தாக்கினர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 4 பேரை கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள், 3 பட்டாகத்தி, ஒரு செல்போன், 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்