கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் : "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"- அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை

கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-03-17 03:32 GMT
கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்பது தொடர்பாக அரசாணை கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ராகுல்காந்தி லந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாகவும், கல்லூரியின் விளக்கம் அரசுக்கு கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்