புதுச்சேரி : பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருட்டு

புதுச்சேரியில் பெண்ணிடம் நூதன முறையில் அரிப்பு பொடியை வீசி 6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2019-03-17 03:26 GMT
புதுச்சேரியில் பெண்ணிடம் நூதன முறையில் அரிப்பு பொடியை வீசி 6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சண்முகாபுரத்தை சேர்ந்த சாந்திமதி வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மர்மநபர்கள், சாந்திமதி மீது அரிப்பு பொடியை வீசியுள்ளனர். இதனால் வீட்டிற்கு வந்த சாந்திமதி பணத்தை சோபாவில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்