500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் இடம் இல்லாமல் நோயாளிகள் அவதி

Update: 2019-03-14 19:04 GMT
நாகை  மாவட்டம், வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில்,   குழந்தைகள், பள்ளி  மாணவர்கள், பெரியவர்கள்  என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு  கடந்த இரண்டு  நாட்களாக வாந்தி மயக்கம் மற்றும்  வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதில், 500-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கொள்ளிடம்  கூட்டு  குடிநீர் திட்டம் மூலம்  விநியோகிக்கப்பட்ட குடிநீரால்  இந்த பாதிப்பு  ஏற்பட்டதாக கூறப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்