இரட்டை இலை வழக்கில் மார்ச் 15ல் விசாரணை

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கில் வருகிற 15ம் தேதியன்று விசாரணை நடைபெறுகிறது.

Update: 2019-03-11 07:37 GMT
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கில் வருகிற 15ம் தேதியன்று விசாரணை நடைபெறுகிறது. இரட்டை இலை சின்னத்தை பன்னீர் செல்வம், பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து தினகரன் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை மார்ச் 15ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்