அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?

அறப்போர் இயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Update: 2019-03-08 12:49 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியது மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக  அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு,  உயர்நீதிடன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன்  முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை வெளியிட தயார் என அறப்போர் இயக்கம் சமூக வலை தளங்களில்  பதிவிட்டிருப்பதை  சுட்டிக்காட்டினார்.
ஆதாரங்களை வெளியிடுவதாக, சமூகவலை தளங்களில் பதிவிடும் அறப்போர் இயக்கம், பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி  எழுப்பிய நீதிபதி, வழக்கு  விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்