உதயமானது புகளூர் வருவாய் வட்டம் : முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேம்பாட்டிற்காக புதிய வருவாய் வட்டம் உருவாக்குவதல், கட்டடம் கட்டுதல், மேலாண்மை துறை அலுவலர்களுக்கு ​குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

Update: 2019-03-06 20:34 GMT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேம்பாட்டிற்காக புதிய வருவாய் வட்டம் உருவாக்குவதல், கட்டடம் கட்டுதல், மேலாண்மை துறை அலுவலர்களுக்கு ​குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி வட்டங்களை சீரமைத்து வேலாயுதம் பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புகளூர் வட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்