தொழிலாளர் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை : கணக்கில் வராத ரூ.48,000 பணம் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரக்கூடிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-22 21:12 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரக்கூடிய தொழிலாளர்  துறை உதவி ஆய்வாளர்  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்   சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை : கணக்கில் வராத ரூ.29,000 பறிமுதல்



விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள  சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஊழல் தடுப்பு  போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில்  கணக்கில் காட்டப்படாத 29 ஆயிரத்து 70 ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்