அதி விரைவு படை குமரி வருகை : பதற்றமான வாக்கு சாவடி குறித்து ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடி மற்றும் பதற்றமான பகுதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டறியபட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடி மற்றும் பதற்றமான பகுதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டறியபட்டு உள்ளது. அந்த இடங்களை ஆய்வு செய்ய கோவையில் இருந்து அறுபது அதி விரைவு படை வீரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றனர். அவர்கள் நாகர்கோவில் உள்ளிட்ட இடலாக்குடி, அதனை தொடர்ந்து பூதப்பாண்டி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்கு சாவடி மற்றும் பதற்றமான பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.