2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ. வி பாதிப்பு : டாக்டர்கள் மீது குழந்தையின் பெற்றோர் புகார்

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால், 2 வயது பெண் குழந்தைக்கு, எச்.ஐ. வி பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2019-02-20 06:52 GMT
கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால், 2 வயது பெண் குழந்தைக்கு, எச்.ஐ. வி பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மணப்பாறையை சேர்ந்த விஸ்வநாதன்- சித்ரா தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒருவர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அலட்சியம் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சிறுமியின் பெற்றோர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை கோவை அரசு மருத்துவமனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்