குழந்தை பலாத்காரம் செய்து கொலை? - தாயின் கள்ளக் காதலனிடம் போலீஸ் விசாரணை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, தாயின் கள்ள காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-02-17 02:04 GMT
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, தாயின் கள்ள காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். நளினி என்ற பெண், தனது கணவரை பிரிந்து சென்று, கள்ளக் காதலுடன் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நளினி, தனது ஒன்றரை வயது மகளை கள்ளக்காதலன் முரளியிடம் கொடுத்து விட்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய போது தனது ஒன்றரை வயது குழந்தை காயங்களுடன் மயங்கி கிடந்தது. மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயம் இருந்துள்ளது இதனையடுத்து, கள்ளக்காதலன் முரளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்