முதலமைச்சரின் போராட்டம் - கிரண்பேடி ஆலோசனை

"சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தை மீறுவதா?" - சமூகவலைதளத்தில் கிரண்பேடி வேதனை

Update: 2019-02-13 22:21 GMT
முதலமைச்சர் நாராயணசாமியின் போராட்டம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், டிஜிபி சுந்தரிநந்தா ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். தர்ணா போராட்டத்தால், ஆளுநர் மாளிகையை விட்டு யாரும் வெளியே போகவோ, உள்ளே வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதள பக்கத்தில் கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார். சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தை மீறும் சட்டவிரோத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்