பேனர்களை போலீஸ் அகற்றியதற்கு தொண்டர்கள் கண்டனம்...

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுலகத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவாளர்கள் மற்றும் பிரச்சாரகர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-02-13 12:50 GMT
சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுலகத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவாளர்கள் மற்றும் பிரச்சாரகர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக இது தொடர்பான விளம்பர பதாகைகள் அக்கட்சி அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை காவல் துறையினர் திடீரென அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இதனை அறிந்த மகிளா காங்கிரஸ் பெண்கள், போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார்  பின்வாங்கியதையடுத்து, அங்கு சிறிது நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்