திரையரங்குகளுக்கு உணவு பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

திரையரங்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-12 02:29 GMT
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது திரையரங்கங்கள் என்பது தனியார் நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை வழங்காத நிலையில் இந்த வழக்கில் உத்தரவில் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்