வேலூர் : செம்மரக்கட்டைகள், லாரி பறிமுதல் - 5 பேர் கைது

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த அமானுல்லா, தனது வீட்டில் செம்மரங்களை பதுக்கி வைத்திருப்பதாக அவரது தாய் நூர்ஜகான் லத்தேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

Update: 2019-02-11 13:34 GMT
வேலூர் மாவட்டம், காட்பாடியை  அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த அமானுல்லா, தனது வீட்டில்  செம்மரங்களை  பதுக்கி வைத்திருப்பதாக அவரது தாய் நூர்ஜகான் லத்தேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அமானுல்லா உள்ளிட்ட ஐந்துபேரை கைது செய்ததுடன் லாரியுடன் செம்மரக்கட்டைகளையும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் செம்மரக்கட்டைகள் மற்றும் வாகனங்களின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்.   
Tags:    

மேலும் செய்திகள்